பவானிசாகர்: பவானிசாகர் அணைப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க, கூட்டமாக வரும் யானைகள், குட்டிகளுடன் நீர் குடித்து, தண்ணீரில் விளையாடும் கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.
பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி, பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில், யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி இப்பகுதிக்கு படையெடுக்கின்றன. அணையை ஒட்டிய வனத்தில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம், சில நாட்களாக மாலை நேரங்களில், பவானிசாகர் அணை மேல் பகுதியை கடந்து, குட்டிகளுடன் தண்ணீர் குடிக்க செல்கின்றன. நேற்று முன்தினம் மாலை, அணை ஜீரோ பாயிண்ட் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட யானைகள், அணை மேல்பகுதி தார்ச்சாலையை கடந்து, தண்ணீர் குடிப்பதற்காக சென்றன. நீர் அருந்துவது மட்டுமின்றி மணிக்கணக்கில் தண்ணீரை பீய்ச்சியடித்து, குட்டிகளுடன் விளையாடுவதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE