கோபி: தி.மு.க.,- எம்.பி.,யும், மாநில மகளிரணி செயலாளருமான கனிமொழி, ஈரோடு மாவட்டம், கோபிக்கு நேற்று வந்தார். அவருக்கு, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், குள்ளம்பாளையம் பிரிவில் காலை, 8:30 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், கனிமொழி முன்னிலையில், தே.மு.தி.க.,-த.மா.கா.,வினர், தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து கனிமொழி வரவேற்றார். பின், உடல் நலக்குறைவால் இறந்த, தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., வெங்கிடு வீட்டுக்கு சென்று, அவர் குடும்பத்தாருக்கு கனிமொழி ஆறுதல் கூறினார். இதையடுத்து, கோபி, வண்டிப்பேட்டையில், வழியில் நின்றிருந்த பெண்களை சந்தித்து, நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்து சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE