ஈரோடு: காளிங்கராயன் வாய்க்காலில் நீர் நிறுத்தம் செய்து, பராமரிப்பு பணி செய்வது குறித்து, காளிங்கராயன் பாசன விவசாயிகள், நாளை முடிவு செய்கின்றனர். காளிங்கராயன் வாய்க்காலில், கான்கிரீட் தளம் அமைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது, வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணியை மேற்கொள்ள பொதுப்பணித்துறை தயாராக உள்ளது. இந்நிலயில், அட்டவணைப்படி மீண்டும் தண்ணீர் திறப்பு காலம் குறித்து முடிவு செய்து, பொதுப்பணித்துறையினரிடம் தெரிவிப்பது தொடர்பாக, காளிங்கராயன் பாசன சபை மற்றும் மதகு பாசன சபை விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம், நாளை காலை, 10:00 மணிக்கு கொம்பனைபுதூர் அம்மன் கலையரங்கில் நடக்க உள்ளது. இதில், விவசாயிகள் விவாதித்து, தங்கள் முடிவை அறிவிக்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE