பவானி: பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, முதியோர், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி ஆகியோர், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தனர். இதில், 754 பயனாளிகளுக்கு, 84 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, சுற்றுச்சூழல் துறை துறை அமைச்சர் கருப்பணன் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ., ஜெயராமன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE