சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டைக்கு பொருட்களை வாங்க வரும் மக்கள், வியாபாரிகளை குறி வைத்து, ஒரு கும்பல் மொபைல் போன்களை திருடி வந்தது. இதையறிந்து, செவ்வாய்ப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம், தேர்முட்டி அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அதில், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த வல்லரசு, 25, விஜய், 22, சக்திவேல், 24, என்பதும், இவர்கள் மொபைல் போன்களை திருடி, குறைந்த விலைக்கு விற்று மது அருந்தி வந்ததும் தெரிந்தது. இதனால், அவர்களை கைது செய்த போலீசார், ஆறு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE