சேலம்: விபத்தில் சிக்கிய போலீஸ் ஏட்டு வாகனத்தை விடுவிக்க, போலீசார் பணம் வசூலித்ததாக, 'வாட்ஸ்ஆப்' தகவல் வெளியானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம், லைன்மேடு போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 38. இவர், மாநகர போலீசின், ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரிகிறார். இவர், கடந்த நவ., 20ல், ஹீரோ ?ஹாண்டா பைக்கில், கொண்டலாம்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். நெத்திமேடு, ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது, எதிரே வந்த ஆட்டோ மோதியது. அதில், காயம் அடைந்த சவுந்தர்ராஜன், அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்த அன்னதானப்பட்டி போலீசார், ஆட்டோ, பைக்கை, ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். பின், இரு வாகனங்களையும் விடுவிக்க, ஆட்டோ டிரைவர், போலீஸ் ஏட்டிடம், தலா, 3,000 ரூபாய் வசூலித்துள்ளனர். விபத்தில் சிக்கிய போலீஸ் ஏட்டிடம் பணம் வசூலித்தது குறித்து, வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில், சிலர் தகவலை கசியவிட்டனர். இது, போலீசார், அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், வசூல் குறித்து விசாரிக்க, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE