வீரபாண்டி: சமுதாய கூட கட்டடம் சேதம் அடைந்துள்ளதால், சீரமைக்க வேண்டும். ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, நல்லா கவுண்டம்பாளையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. தற்போது, பராமரிப்பின்றி மேற்கூரை முழுதும் விரிசல் விழுந்துள்ளது. இதனால், அந்த கட்டடத்தை பூட்டி வைத்துள்ளனர். இரவில், மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக நுழைந்து, மது அருந்துகின்றனர். கட்டடம் இடித்து விழுந்து, அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மராமத்து செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE