பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணைக்கு, நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 50 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில், அமைந்துள்ள அணைக்கு, ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து, நீர்வரத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன், பெய்த தொடர்மழையால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. கடந்த மாதம், 14ல், அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், நீர்மட்டம், 63 அடியாக உயர்ந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வாணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அணைக்கு, 40 கனஅடி நீர்வரத்து வந்த நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 50 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து, 50 கனஅடி நீரும் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால், முள்ளிக்காடு அணைக்கட்டு, வெங்கடசமுத்திரம் ஏரி நிரம்பிய நிலையில், கடந்த நான்கு நாட்களாக ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE