தர்மபுரி: தர்மபுரியில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, நற்சிந்தனை மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை துவங்கப்பட்டது. தர்மபுரியில், பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள், சில அடிப்படை உரிமைகள் கூட கிடைக்க பெறாமல் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், நற்சிந்தனை மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் துவக்கவிழா, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா, தர்மபுரியில் நேற்று நடந்தது. உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். அறக்கட்டளையை துவக்கி வைத்து, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்பட நலத்திட்டங்களை, மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தலைவர் ராஜசேகரன் வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில், 300 மாற்றுத்திறனாளிகள் மொபைல்போன் வேண்டி, விண்ணப்பம் அளித்தனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் சேவியர், தும்பராவ், சத்தியமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE