ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே, கோணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் கவுரன், 42; விவசாயி. இவருக்கு சொந்தமான, 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு பசு மாடுகளை அதே பகுதியில் உள்ள ஜெகநாதன் என்பவரது விவசாய நிலத்தில் கடந்த மாதம், 28ல் கட்டியிருந்தார். மறுநாள் பார்த்த போது பசுமாடுகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில், அந்த இரண்டு பசுமாடுகளையும், தர்மபுரி மாவட்டம் பிக்கனஅள்ளி எல்லப்பன், 42; ராயக்கோட்டை அடுத்த கோட்டை பகுதியை சேர்ந்த கவுதம், 21; ஆகிய இரண்டு பேரும் பிடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கவுரன், ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீஸ் எஸ்.எஸ்.ஐ., சதாசிவம் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள எல்லப்பன், கவுதம் ஆகிய இருவரையும் தேடி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE