கிருஷ்ணகிரி: வரும், 5ல் ஜெயலலிதா நினைவு நாளை கடைப்பிடிக்க வேண்டும் என, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அசோக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், நான்காவது ஆண்டு நினைவு நாள் வரும், 5ல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், அவரது படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்த வேண்டும். இந்நிகழ்ச்சியில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அமைப்பு நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE