நாமகிரிப்பேட்டை: ஊரக கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டியில், அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சியை சேர்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஏற்கனவே வாங்கியவர்களுக்கே மீண்டும் மீண்டும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. முறைகேடாக பயனாளிகளை தேர்வு செய்யும், அ.தி.மு.க.,வினர், கால்நடை மருத்துவர்களை கண்டித்து மங்கள புரத்தில், பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவரும், மாவட்ட குழு உறுப்பினருமான வடிவேலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE