நாமக்கல்: தமிழக அரசு கொண்டு வந்துள்ள, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்ற, நாமக்கல் மாவட்டத்தில் படித்த பாலாஜி, மேஹா, கவின்குமார், மல்லிகேஸ்வரி, கவிஷ்குமார், ரேணுகுமார், கவுசிகா, ஹரிணி, பிரவீன், மயிலா ஆகிய அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். கலெக்டர் மெகராஜ், எம்.எல்.ஏ., பாஸ்கர், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
* பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் சாலை, வடிகால், சிறுபாலம் மற்றும் அங்கன்வாடி மையம், உள்ளிட்ட, 2.38 கோடியில் ஏழு திட்டப் பணிகள் துவக்க விழா நடந்தது. கமிஷனர் இளவரசன் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE