ராசிபுரம்: ராசிபுரத்தில், 400 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் சட்டசபை தொகுதி, ராசிபுரம், வெண்ணந்தூர் மற்றும் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நேற்று நடந்த விழாவில், பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டன. மூன்று ஒன்றியங்களில், 400 பெண் பயனாளிகளுக்கு, எட்டு லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நாட்டுக்கோழிகளை, அமைச்சர் சரோஜா வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., கலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE