நாமகிரிப்பேட்டை: ஒடுவன்குறிச்சியில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாமகிரிப்பேட்டை அருகே, ஒடுவன்குறிச்சி அஞ்சலகம் முன், இந்திய மாணவர் சங்க, நாமக்கல் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE