பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், போலி டீத்தூள் பயன்பாடு அதிகரித்தது வருவதால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி தொழில் முக்கியமானது. இதில் ஏராளமானவர்கள் பணி புரிகின்றனர். டீக்கடைகளும் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன. ஒரு சில தவிர, பெரும்பாலான டீக்கடைகளில் போலி டீத்தூள் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் தொழிலாளர்களின் உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதிகாரிகள் ஆய்வு செய்து போலீ டீத்துளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஆய்வு பணியும் இருந்தது. ஓரிரு ஆண்டுகளாக ஆய்வு பணி தொய்வு நிலையில் உள்ளதால், போலீ டீத்துளை பயன்பாடு அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE