நாமக்கல்: நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி அருகே தேங்கியுள்ள நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் நகர்ப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டாலும், பல்வேறு பணிகளுக்கு செல்லும் மக்களும், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியரும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி முன் உள்ள சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், கழிவு நீர் வெளியே செல்ல வழியில்லாமல் கல்லூரியின் முகப்பு கேட் அருகே மழை நீரோடு சங்கமித்து தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மாணவியர், பேராசிரியர், அலுவலர்கள் என அனைவரும் மிகுந்த சிரமப்பட்டனர். சாக்கடையை தூர்வாரி, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE