கரூர்: 'காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க அரவக்குறிச்சி, புகளூர் வட்ட கிளை சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் சுப்ரமணி தலைமையில், கரூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்பட, 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மாவட்ட துணை செயலாளர்கள் சக்தி வேல், பொருளாளர் நாகராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE