கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் தொடர் மழை காரணமாக, மானாவாரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வல்லம், மாயனூர், வயலூர், சிவாயம், மத்திப்பட்டி, மேட்டுபட்டி, வரகூர், ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், மானாவாரி நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை, உளுந்து, மக்காச்சோளம் மற்றும் சிறு தானியச் செடிகளுக்கு போதிய தண்ணீர் கிடைத்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், மழை காரணமாக, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முடியவில்லை. வீடுகளில் உள்ள தீவனமும் தீர்ந்தது. விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE