கரூர்: பைக்- கார் மோதிய விபத்தில் லாரி கிளீனர் இறந்தார். கரூர், தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் ராஜூ மகன் மணிகண்டன், 19. இவர், லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். நேற்று, கரூரிலிருந்து, பாளையம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். மாலை, 3:00 மணியளவில் எதிரில் வந்த கார் மோதியதில், மணிகண்டன் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன், கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE