கரூர்: கரூர் அருகே உள் வீரராக்கியத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நாள் தோறும் ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளன. மேலும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, உள் வீரராக்கியம் பகுதியில் உள்ள, சேதமடைந்துள்ள சாலைகளை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE