கரூர்: 'வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு வெள்ளியணை, கூடலூர், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், எரியோடு வழியாக, பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு, வாகனங்கள் செல்வது குறைந்து வருகிறது. இதனால், வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில், தனிநபர் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. அடிக்கடி திண்டுக்கல் சாலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் அச்சமும் அதிகரித்துள்ளது. எனவே, வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE