கரூர்: கரூர் அருகே உயர்மட்ட பாலத்தின், இணைப்பு சாலைகளில் இருளில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கரூர்-திண்டுக்கல் பழைய சாலை, வெங்ககல்பட்டி பகுதியில், திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதில், இரண்டு பகுதிகளிலும் இணைப்பு சாலைகள் உள்ளன. ஆனால், இணைப்பு சாலைகள் பிரியும் இடத்தில், இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் ஸ்டிக்கர்கள் இல்லை. இதனால், திண்டுக்கல் சாலை, வெங்ககல்பட்டி பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இரவு நேரத்தில் ஒளிரக்கூடிய சிவப்பு நிறத்திலான, ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE