சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட, 10 புதிய நீதிபதிகள், நேற்று பொறுப்பேற்றனர். அவர்களுக்கு, தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சத்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்செல்வி ஆகியோரை நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். இவர்கள், மாவட்ட நீதிபதிகளாக பதவி வகித்தவர்கள்.புதிய நீதிபதிகள், 10 பேருக்கும், நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதியின் நியமன உத்தரவை, பதிவாளர் ஜெனரல் குமரப்பன் வாசித்தார். அதைத்தொடர்ந்து, 10 நீதிபதிகளும் பதவியேற்றனர்.புதிய நீதிபதிகள் பொறுப்பேற்றதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஒன்பது பெண் நீதிபதிகள் உள்ளனர். புதிதாக சேர்ந்த, நான்கு நீதிபதிகளையும் சேர்த்து, பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையும், 13 ஆக அதிகரித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில், நேற்று பொறுப்பேற்ற நீதிபதிகள் முரளிசங்கர், தமிழ்செல்வி ஆகியோர், கணவன் - மனைவியாவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE