சென்னை : 'புரெவி' புயல் காரணமாக, ஆறு மாவட்டங்களுக்கு, இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த, புரெவி இன்று அதிகாலை கரை கடக்கிறது. அவ்வாறு புயல் கரை கடக்கும் போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன.எனவே, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களுக்கு, இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக, ஜனவரி மாதம், ஒரு சனிக்கிழமை, அரசு அலுவலகங்கள் செயல்படும்.இம்மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என, அரசு தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE