புழல் ஏரி திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
புழல் ஏரி திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

புழல் ஏரி திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Updated : டிச 04, 2020 | Added : டிச 04, 2020 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: புழல் ஏரி திறக்கப்பட்டது. முன்னதாக, கரையோர மக்களுக்கு கலெக்டர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் உபரி நீர் வெளியேற்ற ஏரி திறக்கப்பட்டது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 19 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை
புழல் ஏரி திறப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

சென்னை: புழல் ஏரி திறக்கப்பட்டது. முன்னதாக, கரையோர மக்களுக்கு கலெக்டர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் உபரி நீர் வெளியேற்ற ஏரி திறக்கப்பட்டது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 19 அடியை எட்டியுள்ளது.



இதனையடுத்து கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (டிச.,04) மாலை 3 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news

எனவே புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆனது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-டிச-202004:41:01 IST Report Abuse
Mani . V இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க எங்கள் கௌரவ டாக்டரை அழைத்தவர்கள், புழல் ஏரி திறப்புக்கு ஏன் அழைக்கவில்லை?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-டிச-202020:26:57 IST Report Abuse
Ramesh Sargam மேலும் ஒரு புயல். மன்னிக்கவும், மேலும் இரண்டு புயல்களை தமிழகம் சந்தித்திருக்கிறது. இதிலிருந்து மக்களாகிய நாம் ஏதாவது பாடம் கற்றோமா? அல்லது ஆட்சியில் இருப்பவர்கள் ஏதாவது பாடம் கற்றார்களா? பாடம் கற்றார்களா என்பது எப்படி தெரியும்? தெரியும், அடுத்தமுறை புயல் நம்மை தாக்கும்போது. அடுத்தமுறை புயல் தாக்கும்போது, தாக்கியபின்பு, மக்களுக்கும், உடமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏட்படவில்லையென்றால், பாடம் கற்றோம் என்று அர்த்தம். இல்லையென்றால், கற்கவில்லையென்று அர்த்தம். காத்திருப்போம் அடுத்த புயல் வரும் வரை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X