அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி, தளஞ்சிபாளையம் பகுதியில், ஞாயிறுதோறும் நடந்துவந்த நுாறாண்டு பழமையான வாரச்சந்தை, சில ஆண்டுகள் முன்பு மூடப்பட்டது. இப்பகுதி மக்கள் சிலர், கலெக்டருக்கு அனுப்பிய மனுவில், ''நடுவச்சேரி பகுதியில், மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. விவசாயமும், பெரும் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள மக்கள்,அத்தியாவசிய பொருட்களை வாங்க, ஆறு கி.மீ., துாரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் இங்கு வாரச்சந்தை திறக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE