முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு, அவிநாசி பேரூராட்சியில் நகர செயலாளர் ராமசாமி தலைமையில், ஜெ., படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மாலையில், வீடுகளில் தீபம் ஏற்றி, பிரார்த்தனை செய்யப்பட்டது. கருவலுார் ஊராட்சியில், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட ஜெ., பேரவை துணை தலைவர் காத்தவராயன், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ரவிகுமார் முன்னிலை வகித்தனர். கட்சியினரும் தங்கள், வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE