ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மணலுார்பேட்டையில் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைராஜ் (வ) தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி (ம), அருணகிரி(தெ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெ., உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தங்கவேலு, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE