கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., சார்பில் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சவரணன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், வளர்மதி, சுப்ரமணியன் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், விவசாயம் மற்றும் விவசாயிகளை சீரழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். டில்லியில் போராடும் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE