லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 17.05 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கிடையே, 'பைசர்' மற்றும், 'பயோ என் டெக்' இணைந்து உருவாக்கியுள்ள, வைரசுக்கான தடுப்பூசி மருந்தை, பிரிட்டனில் பயன்படுத்த, அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், நாளை முதல் தடுப்பூசிகளை வழங்க, 50 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 94, மற்றும் அவரது கணவர், இளவரசர் பிலிப், 99, ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE