பொங்கலுார்:கோவை இருகூரிலிருந்து பெங்களூர் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில், எரிவாயு குழாய் அமைக்கப்பட உள்ளது. விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்காக, தென்னை, பனை, மா உள்ளிட்ட மரங்கள் வேரோடு பிடுங்கப்படுவதாக கூறி, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.எரிவாயு குழாய்களை ரோட்டோரம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், நாமக்கல் மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், விவசாய நிலத்தில் நில அளவை பணி துவங்கியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொங்கலூர் குளத்துப்பாளையத்தில் விவசாயி முத்துராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE