திண்டிவனம் : கிளியனூர் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகிறது.தமிழகத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் தாக்கத்தால் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக பெய்த தொடர் மழையால், ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.வானூர் வட்டம் கிளியனூர் பகுதியில் உள்ள ஏரிகள் முழுவதும் நிரம்பிவிட்டன. குறிப்பாக கிளியனூர், கொந்தமூர் ஏரிகளில் நீர் நிரம்பி மதகு வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் ஏரிகள் நிரம்பிவழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE