சென்னை: முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து, அவரது தாய் மறைவிற்கு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை ஆறுதல் கூறினார்.
முதல்வர் இ.பி.எஸ்.,சின் தாய் தவுசாயம்மாள், உடல்நலக்குறைவால், அக்டோபரில் இயற்கை எய்தினார். முதல்வருக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று, ஆறுதல் கூறினர். இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை, நேற்று சென்னை வந்தார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டிற்கு சென்று, அவரது தாய் மறைவிற்கு ஆறுதல் கூறினார். அப்போது, தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தர்ராஜன் உடன் இருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE