திருப்பூர்:திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கங்கள் கூட்டுக் கூட்டம், பி.என்., ரோடு ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.மாவட்ட பொது செயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உன்னி கிருஷ்ணன்,எல்.பி.எப்., சிதம்பரசாமி, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்ட விவசாய கூட்டமைப்புகள் சார்பில், டிச., 8 ல்(நாளை) பந்த் அறிவித்துள்ளனர்.போராட்டம் வெற்றியடைய அனைத்து தரப்பு தொழிலாளர்களும் தங்கள் வேலைகளை ஒரு நாள் நிறுத்தி விட்டு போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE