சென்னை: சாலை மறியல் செய்த, திருவள்ளூர் எம்.பி., உட்பட, 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின், 64ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை ராஜாஜி சாலையில் உள்ள, அம்பேத்கர் சிலைக்கு வந்து, பலரும் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை, திருவள்ளூர் எம்.பி., ஜெயகுமார் உட்பட, 50க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஊர்வலமாக வந்தனர்.
'ஊர்வலம் செல்ல அனுமதியில்லை' என, போலீசார் தடுத்து நிறுத்தினர்.போலீசாருடன் வாக்குவாதம் செய்த காங்கிரசார், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். பின், ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி, ராஜாஜி சாலையில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட ஜெயகுமார் எம்.பி., உட்பட, 50க்கும் மேற்பட்ட காங்கிரசாரை, வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE