கிருஷ்ணகிரி: சேலம் மாவட்டம், சிவதாபுரத்தைச் சேர்ந்தவர் வீரமணி, 36; வெள்ளி நகைக் கடையில் பணிபுரிகிறார். இவர், மூன்று பைகளில், 26 கிலோ வெள்ளி நகைகளை, ஆந்திர மாநிலம், செகந்திராபாதுக்கு நேற்று முன்தினம், தனியார் ஆம்னி பஸ்சில் கொண்டு சென்றார்.பஸ், கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில், தனியார் ஓட்டலில், இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. வீரமணி ஓட்டலில் சாப்பிட்டு திரும்பி வந்தபோது, பஸ்சில், 10 கிலோ வெள்ளி நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் இருந்த நகைகளின் மதிப்பு, 5.25 லட்சம் ரூபாய். குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE