பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில், அழுகிய நிலையில், கரை ஒதுங்கிய முதியவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் கடந்த மாதம் 28ம் தேதி அழுகிய நிலையில், 60 வயது மதிக்கத்தக்க, முதியவரின் உடல் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. வெள்ளை வேட்டி அணிந்துள்ளார். இதுகுறித்து, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.இறந்த முதியவரின் விபரம் தெரிந்தால், இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மொபைல் எண்ணில் (9498154070) தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE