கிள்ளை : கிள்ளையில், அடிப்படை வசதிகள் செய்துத்தரக்கோரி நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில், ஈடுப்பட்டதால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
கிள்ளை பகுதியில், கடந்த நான்கு நாட்களாக தொடர் கன மழை பெய்து வருவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட கிள்ளை குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் நிவாரணம் வழங்க வேண்டும்; அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரிகிள்ளை செக்போஸ்ட் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.தகவலறிந்த, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததால்,அனைவரும் கலைந்துச்சென்றனர்.இந்த மறியலால், சிதம்பரம் - கிள்ளை சாலையில் காலை 11;30 மணி முதல் மதியம் 12 மணி வரை, 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE