சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு, வெள்ளாறு ராஜன் வாய்க்கால் சாலை உள்வாங்கி, போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை - கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு வெள்ளாறு ராஜன் வாய்க்கால் கரையில் உள்ள சாலை கன மழை காரணாக உள்வாங்கியுள்ளது.சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கும்பகோணம் உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2004 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த பகுதி உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.
இந்த இடத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில் கரையை அமைக்காமல், சாலை அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது பெய்து வரும் கனமழையினால் சாலை உள் வாங்கி பிளவு ஏற்பட்டுள்ளது.இதனால், இவ்வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வெள்ளாறுராஜன் கரையை கான்கீரிட் அமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE