கடலுார் : மகனுடன் பைக்கில் சென்ற தாய் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து இறந்தார்.
கடலுார், செம்மங்குப்பம் அடுத்த நொச்சிக்காட்டைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன் மனைவி ராஜேஸ்வரி, 43; இவர், கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து மகன் சந்தோஷ்குமாருடன் பைக்கில் முதுநகர் நோக்கி புறப்பட்டார். மழை பெய்ததால் சிறிது நேரம் சென்றதும் ராஜேஸ்வரி குடையை பிடித்தார். அப்போது, காற்று வேகமாக வீசியதால் குடை பறந்தது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE