கடலுார் : டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விவசாய சங்க பிரதிநிதிகள் நாளை (8ம் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE