கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24,342 ஆக அதிகரித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் நோய் அறிகுறியுடன் 4 பேர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேர் என மொத்தம் 24 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24,342 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று, 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,973 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 4,42,732 பேருக்கு பரிசோதனை செய்ததில், 24,342 பேருக்கு தொற்று உறுதியானது. 4,17,962 பேருக்கு தொற்று இல்லை. 428 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 64 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று 2 பேர் இறந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 277 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE