துாத்துக்குடி: சொத்து தகராறில், தாய் தற்கொலை செய்து கொண்டார். அவரது மகன்களை, கொலை வழக்கில், போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி, ஸ்பிக் நகர் தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மரியபெருமாள், 60; மனைவி ஞானகனி, 56. இவர்களுக்கு, முத்துராஜ், 37; செல்வகுமார், 35 என இரண்டு மகன்கள், ஒரு மகள். மூவருக்கும் திருமணமாகி விட்டது. மாயபெருமாள் பெயரில் உள்ள நான்கு வீடுகளில், மகன்கள் இருவரும் வசித்து வந்தனர். வீடுகளை, தங்கள் பெயருக்கு எழுதி தரும்படி கேட்டனர். அதற்கு தாயார் ஞானகனி எதிர்ப்பு தெரிவித்தார்.
இருவரும் மறைந்த பிறகு சொத்தை பிரித்து கொள்ளுங்கள் என கூறினார்.இதனால், ஆத்திரம்அடைந்த முத்துராஜ், ஞானகனியை கம்பியால் தாக்கினார். காயமுற்ற ஞானகனி மருத்துவமனையில் குணமடைந்த நிலையில், மகன்களின் தொல்லையால், வீட்டில் மண்ணெண்ணெய் குடித்தார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இறந்தார். மகன்கள் இருவரையும், கொலை வழக்கில் முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE