நாகர்கோவில்: புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரியில் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது.புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்து டிச.,2ல் நிறுத்தப்பட்டது.
கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் 4 நாட்கள் கன்னியாகுமரி வெறிச்சோடியது.இந்நிலையில் நேற்று காலை முதல் தடை விலக்கி கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கடற்கரைக்கு சென்றனர். நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. உள்ளூர், பக்கத்து மாவட்ட மக்கள் மட்டும் வருகின்றனர். வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று மதியம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE