ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தாசில்தார் முகமது அசேன் தலைமை தாங்கினார். இதில் தற்போதுள்ள பேரிடர் காலத்தில் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் நிகழும் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தல், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், பாதிப்புக்குள்ளாகும்மக்களுக்கு உரிய உதவிகள் செய்தல் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர் வினதா, பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன், பி.டி.ஓ. சுந்தரம், பொதுப்பணித்துறை பிரிவு அலுவலர் ரவிச்சந்திரன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜ்குமார், மின்வாரிய அதிகாரிகள் ராஜேஷ், மூர்த்தி, டாக்டர் ஸ்ரீராம், ஆர்.ஐ. குமாரகிருஷ்ணன், வி.ஏ.ஓ. ரங்கசாமி, மற்றும் கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE