நடுவீரப்பட்டு : கன மழை காரணமாக கைத்தறி நெசவு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், முத்துகிருஷ்ணாபுரம், புதுப்பேட்டை, கே.என்.பேட்டை, வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, குறிஞ்சிப்பாடி, மீனாட்சிபேட்டை, கஞ்சம நாதன்பேட்டை, காரைக்காடு, சான்றோர்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்து வருகின்றனர்.
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நெசவாளர்கள் நெசவு செய்ய முடியாமல் பாதித்துள்ளனர். நெசவு தொழிலின் உபத்தொழிலான பாவுபட்டறை, நுால் இழைத்தல் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.மழை அதிகமாக பெய்வதால் தறி குழியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் நெசவு செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கைத்தறி நெசவு தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE