வேப்பூர் : ஜெ., நினைவு நாளையொட்டி, அ.தி.மு.க., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வேப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆவின் சேர்மன் பச்சமுத்து தலைமையில், கட்சியினர் ஜெ., உருவ படத்துடன் மவுன ஊர்வலம் சென்று, படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பையா, ஆறுமுகம், டென்சிங், மருத்துவர் அணி மாவட்ட பொருளாளர் சம்பத், நிர்வாகிகள் முருகன், சுப்பிரமணியன், மகளிரணி நிர்வாகிகள் சுமதி, சந்திரலேகா, லதா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாதேஸ்வரன், வழக்கறிஞர் குமரேசன் பங்கேற்றனர். இதேபோன்று, பெரியநெசலூரில் நல்லூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் தங்கராசன் தலைமையில், ஜெ., உருவ படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.கடலுார்குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கொத்தவாச்சேரி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு தினம் மத்திய மாவட்ட அ.தி.மு.க., செயலர் அமைச்சர் சம்பத் அறிவுறுத்தல் பேரில் அனுசரிக்கப்பட்டது. கொத்தவாச்சேரி ஊராட்சித் தலைவரும், குறிஞ்சிப்பாடி ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு செயலருமான அன்பு தலைமை தாங்கி, ஜெ., திருவுருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் பாலு, பக்தவச்சலம், திருஞானம், வெங்கடேசன், வேல், ஆறுமுகம், ராகுல், செந்தில், ஜெயபாலன், சிவகுரு உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE