வாரணாசி : வாரணாசியில் உள்ள இரண்டு சட்டமேலவை தொகுதிகளை, 10 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., பறிகொடுத்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், காலியாகி இருந்த, 11 சட்டமேலவை இடங்களுக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஐந்து இடங்கள், பட்டதாரிகளுக்கும், ஆறு இடங்கள், ஆசிரியர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு, தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த, 11 தொகுதிகளில், ஐந்து இடங்களை பா.ஜ., கைப்பற்றியுள்ளது. மூன்று இடங்களை சமாஜ்வாதி கட்சியும்; இரண்டு இடங்களை சுயேட்சைகளும் வென்றுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்தில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது.

அதன்படி, பட்டதாரிகளுக்கான ஆக்ரா தொகுதியை, பா.ஜ., வேட்பாளர் மன்வேந்திர பிரதாப் சிங், கைப்பற்றினார். இதேபோல், பட்டதாரிகளுக்கான மீரட் தொகுதியை, பா.ஜ.,வின் தினேஷ் கோயல் கைப்பற்றினார். எனினும், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான இரண்டு இடங்களையும், சமாஜ்வாதி கைப்பற்றியது.
சமாஜ்வாதியின் அஷுதோஷ் சின்ஹா, பட்டதாரிகளுக்கான இடத்திலும்; மன்சிங் யாதவ், ஆசிரியர்களுக்கான இடத்திலும் வென்றனர். வாரணாசியில் உள்ள இரண்டு சட்டமேலவை தொகுதிகளில், 10 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE