கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், தக்காளி வரத்து அதிகரித்ததால், விலை சரிந்துள்ளது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், கடந்த ஜூலை மாதம், 331.05 ெஹக்டேரில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், நாட்டு ரகமான சிவம், 5005, வீரிய ஒட்டு ரகமான அக்சயா, மேகதுாத் போன்ற ரக தக்காளிகளை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.தற்போது, செடிகள் காய்ப்புக்கு வந்துள்ளதால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் செடியில் இருந்து தக்காளி பறித்து, 14 கிலோ பிளாஸ்டிக் பெட்டியில் அடுக்கி, கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர்.புயல் மழை காரணமாக, செடிகளில் உள்ள தக்காளிகள் பழுக்காமல் பழுப்பு நிறமாக மாறியுள்ளது. இந்த தக்காளிகளை விவசாயிகள் நேற்று நடந்த ஏலத்திற்கு பறித்து வந்தனர்.ஏலத்தில், 14 கிலோ எடையுடன் கூடிய, 15 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்து இருந்தது. தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 220 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.கடந்த வாரத்தில், தக்காளி பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 240 ரூபாய்க்கு ஏலம் போனது. மழை காரணமாக தக்காளிகள் பாதிக்கப்பட்டதால், பெட்டி ஒன்றுக்கு 20 ரூபாய் விலை சரிந்துள்ளது.ஏலத்தில் எடுக்கப்படும் தக்காளிகள், காய்கறி கடைகளில் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மளிகை கடைகளில் 25 ரூபாயும், சூப்பர் மார்க்கெட்களில், 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE